Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பட்டுக்கோட்டை: மதுக்கூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க. நிவாரண உதவி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அருகே உள்ள மதுக்கூர் வடக்கு ஆவணி குளக்கரையில் வசித்து வருபவர் தவமணி வயது 74 கூலிவேலை செய்து வருபவர். இவரும் இவரது மருமகள் அந்தோணியம்மாள் தனித்தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தனர்.
இதில், கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகளும் தீக்கிரையாகின. இதனையடுத்து பல்வேறு அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என தன்னால் இயன்ற அளவு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அ.ம.மு.க. சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை மதுக்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராஜ பிரபு தலைமையில் காய்கறிகள், பழங்கள், அரிசிகள், போர்வை, படுதா மற்றும் நிதி உதவி ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினருமான சிவகுமாரன், மதுக்கூர் வடக்கு துரை பழனியப்பன், திருமாறன், மோகூர் ராஜா, மோகூர் பெருமாள், புலவஞ்சி பெருமாள் மாவட்ட பிரதிநிதி, ரங்கராஜ், செந்தில் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.